தமிழகத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணியிட நிர்ணயம் – நெறிமுறைகள் வெளியீடு!
தமிழகத்தில் 2021 ம் ஆண்டுக்கான தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்வதற்கான மாதிரி அட்டவணை அரசால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே ஆசிரியர் பணியிடம் நிர்ணயிக்கப்பட உள்ளது.
ஆசிரியர் பணியிடம்:
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து கொரோனா கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதனை தொடர்ந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகளை பொறுத்தவரை தொடக்க பள்ளிகள் முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை அனைத்தும் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இந்நிலையில் தற்போது தமிழக அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பணி நிர்ணயம் செய்வது குறித்த மாதிரி அட்டவணையை வெளியிட்டுள்ளது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.10,000 நிவாரணம் – முன்னாள் முதல்வர் கோரிக்கை!
இந்த ஆசிரியர் பணியிட நிர்ணய மாதிரி அட்டவணையானது அனைத்து அரசு பள்ளிகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் அனுப்பப்படும். ஏனென்றால் அரசுப் பள்ளிகளில் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் கல்வித்தரம் மேம்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை மாறுபட்டு காணப்படும். அதனாலேயே இந்த ஆசிரியர் பணி நிர்ணய அட்டவணை வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பணி நிர்ணய அட்டவணையை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை: நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட் – அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை!
அதன்படி தொடக்கப்பள்ளியில் 60 மாணவர்கள் வரை உள்ள பள்ளிகளில் 2 ஆசிரியர்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 61 முதல் 90 மாணவர்களுக்கு 3 ஆசிரியர்களும், 91 முதல் 120 மாணவர்களுக்கு 4 ஆசிரியர்கள் என நிர்ணயிக்கும் வகையில் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 121 முதல் 200 மாணவர்களுக்கு 5 ஆசிரியர்களும் நிர்ணயிக்கப்படுவார்கள். 200 க்கு மேல் மாணவர்கள் இருக்கும் பள்ளிகளில் ஒவ்வொரு 40 மாணவர்களுக்கும் 1 ஆசிரியர் வீதம் பணியிடம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கூறி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.