தமிழகத்தின் புதிய தலைமை தேர்தல் ஆணையர் – வெ.பழனிக்குமார் நியமனம்!!
தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக சத்தய பிரதா சாகு திகழ்ந்து வந்த நிலையில் தற்போது புதிய தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் வெளியிட்டார்.
தலைமை தேர்தல் ஆணையர்:
தமிழகத்தின் தலைமை தேர்தல் ஆணையராக சத்திய பிரதா சாகு திகழ்ந்து வந்தார். இவரது தலைமையில் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. கொரோனா நோய்பரவலுக்கு மத்தியில் தமிழகத்தில் மிக பாதுகாப்பான முறையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது தமிழகத்தின் புதிய தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் செய்ப்பட்டுள்ளார். தற்போது இதற்கான உத்தரவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் வெளியிட்டுள்ளார்.
TN Job “FB Group” Join Now
அதன்படி தமிழகத்தின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக வெ.பழனிக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரது பணிக்காலம் தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்ற நாளில் இருந்து அடுத்த இரண்டு ஆண்டு காலத்திற்கு தலைமை தேர்தல் அதிகாரி பதவியில் திகழ்வார். இவர் கடந்த 2001ம் ஆண்டு முதல் ஐ.ஏ.எஸ் பொறுப்பில் வகித்து வந்தார். அதுமட்டுமல்லாமல் சுற்றுலா மற்றும் பொதுத்துறை என பல்வேறு துறைகளில் பொறுப்புகளை வகித்துள்ளார்.
தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெரும் வயது குறைப்பு?தலைமை செயலாளரிடம் கோரிக்கை!!
இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து ஓய்வுபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் பதவி ஏற்ற பின்பு பல மாற்றங்கள் ஏற்ப்படலாம் என்று எதிர்பார்க்கப்டுகிறது. அதன்படி தற்போது தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வருகிறது. இவர் பதவி ஏற்ற பின்பு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.