தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 % உள் இடஒதுக்கீடு
தமிழக அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கூடுதலாக மருத்துவம் பயிலும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரியில் 7.5.% சதவீத இடஒதுக்கீடு பெறும் மசோதாவுக்கு 45 நாட்களுக்கு பின் கவர்னர் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
வேலைவாய்ப்பு செய்திகள்
ஆளுநர் ஒப்புதல்:
மருத்துவ படிப்பில் சேர நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் கட் ஆப் அடிப்படையில் மட்டுமே மருத்துவம் படிக்க இயலும் என்ற நிலையை மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த மாதம் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு பல எதிர்ப்புகளுக்கிடையே நடைபெற்று முடிந்தது. இதில் நாட்டில் உள்ள மாணவர்கள் தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருந்த நிலையில் தேர்வு முடிவு சென்ற வாரம் வெளியிடப்பட்டது.
இத்தேர்வில் பல அரசு பள்ளி மாணவ மாணவிகள் வெற்றி பெற்றனர். எனவே அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெட்ரா மாணவர்களுக்கு, மருத்துவ கல்லூரியில் சேர 7.5. சதவீத உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதாவை கொண்டு வந்தது. கடந்த மாதம் 16ம் தேதி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
மருத்துவ கவுன்சிலிங் :
அமைச்சர்கள் கவர்னரிடம் ஒப்புதல் பெற வலியுறுத்தினர். இந்நிலையில், சட்ட மசோதா குறித்து கவர்னருக்கு சாதகமான பதிலை, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் அனுப்பி வைத்தார். இதனையடுத்து, உள்இடஒதுக்கீடு மசோதாவுக்கு 45 நாட்களுக்கு பின் கவர்னர் ஒப்புதல் அளித்தார். இதனால், அரசு பள்ளியில் படித்த 300 முதல் 400 மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பு இடங்கள் கிடைக்கும். விரைவில், மருத்துவ கவுன்சிலிங் துவங்கும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்