தமிழக வாகன ஓட்டிகள் கவனத்திற்கு – போலீஸ் புதிய எச்சரிக்கை!
அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்தில் சில நடவடிக்கைகளை சென்னை போலீஸ் எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு டிராபிக் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
போக்குவரத்து நெரிசல்:
சென்னையில் முக்கியமான இடமான மத்திய கைலாஷ் பகுதி ராஜீவ் காந்தி சாலையை இணைக்க கூடிய, அதே போல் அடையார் பகுதியை இணைக்க கூடிய பகுதியாவும் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம், கோட்டூர் புறம், கிண்டி போன்ற பகுதிகளை இணைக்க கூடியதாகவும் திகழ்கிறது. இதனால் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பழைய மாமல்லபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பொழுதுபோக்கு மையங்கள் காரணமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் இன்று செயல்படுத்தப்படுகிறது. இந்த பகுதியை கடப்பதற்கு சுமார் 20 நிமிடம் முதல் 30 நிமிடம் ஆகிறது. இதில் குறிப்பாக காலை வேளையில் மற்றும் மாலை வேளையில் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக இந்த பகுதியில் ஒரு புதிய மேம்பாலம் பணி விரைவில் தொடங்க இருக்கிறது. ஆகையால் இந்த பகுதிகளில் ஏற்படும் கூட்ட நெரிசல்களை கட்டுப்படுத்த டிராபிக் போலீஸ் சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
Exams Daily Mobile App Download
அது என்னவென்றால், ஸ்பென்சர் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்மித் சாலை வழியாக சென்றால் ஒயிட்ஸ் சாலைக்கு சென்று அடையலாம் என்று தெரிவித்துள்ளன. அதனைத்தொடர்ந்து டவர் கிளாக் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் பட்டுலாஸ் சாலை வழியாக அண்ணா சாலையை அடையலாம் என்றும் பட்டு லாஸ் சாலையில் இருந்து வரும் வாகனங்களும் ரேமண்ட்ஸ் துணிக்கடை எதிரில் U திருப்பம் செய்து செல்லலாம் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்தினால் ஸ்மித் சாலை சிக்னல் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அண்ணா மேம்பாலம் நோக்கி செல்லும் வாகனங்கள் தங்கு தடையின்றி செல்லலாம் என போக்குவரத்து போலீஸ் தெரிவித்துள்ளன.
சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
அதுமட்டுமின்றி, பழைய மாமல்லபுரம் சாலை இந்திரா நகர் சந்திப்பு வழியாக அடையாறு நோக்கி செல்லும் வாகனங்கள், ராஜீவ்காந்தி சாலை வழியாக இடதுபுறம் திரும்பி, சா்தாா் பட்டேல் சாலையை சென்று காந்தி மண்டபம் மேம்பாலத்தின் கீழ் U திருப்பத்தில் திரும்பி மீண்டும் சா்தாா் பட்டேல் சாலை வழியாக சி.பி.டி சந்திப்பை அடையலாம் என தெரிவித்துள்ளது. அங்கிருந்து அவரவா் இலக்கை அடையலாம் அல்லது பழைய மாமல்லபுரம் சாலையில் இருந்து அடையாறு நோக்கி செல்லும் வாகனங்கள் இந்திரா நகர் சிக்னலில் வலது புறம் திரும்பி இந்திரா நகர் 2-வது அவென்யூ வாட்டர் டேங்க் சாலை இந்திரா நகர் 1-வது அவென்யூ சந்திப்பு வழியாக எல்.பி.சாலையில் சென்று அடையலாம் என தெரிவித்துள்ளது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இந்த வழிமுறைகளை பின்பற்றுமாறு பொது மக்களிடம் போக்குவரத்து போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.