கொரோனா தாக்கத்தில் இருந்து விரைவில் மீளும் தமிழகம் – அமைச்சர் நம்பிக்கை!
மாநிலம் முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வருவதால் வெகு சீக்கிரத்தில் கொரோனாவில் இருந்து மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பானது குறைந்து வருகிறது. அதாவது மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, தினசரி கொரோனா பாதிப்பானது 25 ஆயிரம் வரை பதிவு செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக 35 ஆயிரம் வரை தினசரி பாதிப்பு ஏற்பட்டது. தவிர பலி எண்ணிக்கையும் ஒரு நாளைக்கு 400 க்கும் மேல் ஏற்பட்டது. அந்த நேரத்தில் தமிழகம் சற்று கடுமையான சூழலை எதிர்கொண்டு வந்தது.
TN Job “FB Group” Join Now
மருத்துவமனைகள் அனைத்தும் கொரோனா நோயாளிகளால் நிறைந்து வழிந்தது. தவிர ஆக்சிஜன் படுக்கைகள், வெண்டிலேட்டர் போன்றவைகளுக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டது. இந்த காலகட்டத்தில் தான் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது என மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தமிழக பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து 2 நாட்களில் முடிவு – அமைச்சர் அறிவிப்பு!!
தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களை விட குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வருவதால் வெகு சீக்கிரமாக கொரோனாவில் இருந்து மீண்டு விடுவோம் என்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகள் இல்லை என்ற நிலை உருவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.