தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு? அமைச்சர் விளக்கம்!

0
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு? அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் ஒன்றிய அரசின் நிபந்தனை படி மின்கட்டணம் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் புதிய மின் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மின் கட்டணம் உயர்வு:

தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என மத்திய அரசு பல முறை கடிதம் எழுதி இருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் தற்போது மத்திய அரசின் நிபந்தனைகளை ஏற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு மின்கட்டணத்தை உயர்த்தாமல் இருந்தால் மத்திய அரசு மானியம், மின் திட்டங்கள் போன்றவற்றை ரத்து செய்துவிடும் என எச்சரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் மின் கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்தால் நிதி வழங்கமாட்டோம் என தெரிவித்துள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

TN Job “FB  Group” Join Now

தமிழ்நாடு மின்சார வாரியம் தற்போது கடனில் சிக்கி இருக்கிறது. ஒரு வீட்டிற்கு ஒரு இணைப்பு என்ற வகையில் திட்டம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் 100 யூனிட் இலவச மின்சாரத்தை வேண்டாம் என்று நுகர்வோரே எழுதிக் கொடுக்கும் திட்டம் கொண்டுவரப்பட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் புதிய மின் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

புதிய மின் கட்டணம்

  • தமிழ்நாட்டில் உள்ள 2.37 கோடி வீடு மற்றும் குடிசைமின் நுகர்வோரில், ஒரு கோடி நுகர்வோர்களுக்கு (42.19 சதவீதம்) மின் கட்டண உயர்வு இல்லை
  • அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் மற்றும் குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும்.
  • வீட்டு மின்நுகர்வோர்களுக்கு தேர்தல் வாக்குறுதி எண்.222-ன் நிலைக்கட்டணம் இருமாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ. 50 வரை செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால் 2.37 கோடி வீட்டு மின்நுகர்வோர்கள் பயன் பெறுவார்கள்.
  • தற்பொழுது குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிப்பாட்டுதலங்கள் முதலிய மின் கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.

தமிழகத்தை அச்சுறுத்தும் குரங்கு அம்மை நோய் தொற்று – விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்!

  • இருமாதங்களுக்கு மொத்தம் 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63.35 இலட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு (26,73 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.27.50) மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
  • இரு மாதங்களுக்கு மொத்தம் 300 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 36.25 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (15.30 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.72:50 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
  • இரு மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 18,82 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (7.94 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.147,30 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
  • இரு மாதங்களுக்கு மொத்தம் 500 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 10.56 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (4.46 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.207.50 மட்டுமே உயர்த்த உத்தேரிக்கப்பட்டுள்ளது.
  • இரு மாதங்களுக்கு மொத்தம் 600 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 3.14 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (1.32 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.155 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
  • இரு மாதங்களுக்கு மொத்தம் 700 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 196 இலட்சம் வீட்டுமின் நுகர்வோர்களுக்கு (0.83 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.275 மட்டும் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
  • இரு மாதங்களுக்கு மொத்தம் 800 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 1.26 இலட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு (0.53 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.395 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
  • இரு மாதங்களுக்கு மொத்தம் 900 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 0.84 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (0.35 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ. 565 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!