தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்கள் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்கள் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்கள் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகப்பகுதிகளின் மேல்‌ நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியினால் ஒரு சில இடங்களில் மிதமான மழை மற்றும் கனமழையும், ஒரு சில இடங்களில் சூறாவளி காற்றும் அடிக்க கூடும் என்ற தகவலும், இதனால் மீனவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை விடுப்பு பற்றியும் இந்திய வானிலை ஆய்வு துறை வெளியிட்டுள்ளது.

வானிலை தகவல்‌ :

தமிழகத்தின் மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்‌சி காரணமாக பல மாவட்டங்களில் கனமழையும், ஒரு சில மாவட்டங்களில் லேசான மழைப்பொழிவும் இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 18) மற்றும் ஆகஸ்ட் 19,20,21,22 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளின் ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை பெய்ய இருக்கும் பகுதிகள் விவரம் :

18.08.2022: டெல்டா மாவட்டங்கள்‌, ராமநாதபுரம்‌, தேனி, திண்டுக்கல்‌, அரியலூர்‌, திருச்‌சிராப்பள்ளி, மதுரை, விருதுநகர்‌, புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில் ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை:

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடனும், நகரின்‌ ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன்‌ கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்‌. அப்போது தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

18.08.2022: ஆந்திர கடலோர பகுதிகள், குமரிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும் வீசக்கூடும்‌.

19.08.2022: மத்திய மேற்கு வங்க கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய வட ஆந்திர கடலோர பகுதிகள், தெற்கு வங்க கடல்‌ பகுதிகள்‌ மற்றும்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

திருப்பதி கோவில் செல்வதற்கான தரிசன கட்டண சேவை டிக்கெட் விநியோகம் – தேவஸ்தானம் அறிவிப்பு!

20.08.2022: மத்திய மேற்கு வங்க கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய வட ஆந்திர கடலோர பகுதிகள், மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 65 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

21.08.2022, 22.08.2022: குமரிக்கடல்‌ பகுதிகள், மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஒட்டிய தென்தமிழக கடலோர பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுிறார்கள்‌.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!