தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் மறுதேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு – சபாநாயகர் அறிவிப்பு!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் முதல்முறையாக கடந்த மாதம் தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்ததை அடுத்து, மறு தேதி குறிப்பிடப்படாமல் சபாநாயகர் தள்ளிவைத்துள்ளார்.
சட்டப்பேரவை:
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவினர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். கடந்த மே மாதம் தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்றார். புதிய ஆட்சி அமைந்த பிறகு கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி ஆண்டு முதன்முதலில் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் அவர்கள் முதலில் உரையாற்றி கூட்டத்தை தொடங்கி வைத்தார்.
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஆதார் – பான் இணைப்பு அவசியம்!
பின்னர், ஆகஸ்ட் 13-ம் தேதி தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையும், 14-ம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு, தினமும் அரசின் ஒவ்வொரு துறை சார்பாகவும் மானியக் கொள்கை விவாதம் நடந்தது. அனைத்து துறையின் அமைச்சர்களும் புதிய அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை பற்றி தெரிவித்துள்ளனர். மேலும், எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளனர். இன்றுடன் கூட்டத்தொடர் முடிவடைந்துள்ளது. மொத்தம், தமிழ்நாடு சட்டப்பேரவை 28 நாட்கள் நடைபெற்றுள்ளது.
TN Job “FB Group” Join Now
கூட்டத்தொடர் இன்று நிறைவு பெறுவதை ஒட்டி சபாநாயகர் அப்பாவு, நிறைவுரையாற்றினார். அப்போது, யாருடைய மனமும் புண்படாமல் பேச வேண்டும் என உறுப்பினர்களிடம் முதலமைச்சர் கூறியதாகவும், எதிர்கட்சியினருக்கு அதிக வாய்ப்பு கொடுப்பதாக ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சொல்வதே, இக்கூட்டம் நடுநிலையாக செயல்படுவதற்கு எடுத்துக்காட்டு எனவும் தெரிவித்தார். பேரவையை செம்மையாக நடத்துவதில் உதவியாக இருந்த பேரவை முன்னவருக்கும் சபாநாயகர் அப்பாவு நன்றி தெரிவித்தார். பின்னர், சட்டப்பேரவை கூட்டத்தொடரை மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பதாக அறிவித்தார்.