தமிழக கள்ளக்குறிச்சி மாணவி இறப்பு வழக்கு – பெற்றோர்களுக்கு நீதிபதி அதிரடி கேள்வி!
கடந்த சில நாட்களாக தமிழகத்தையே உலுக்கி வரும் கள்ளக்குறிச்சி மாணவி மரணம் குறித்த வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அதில் வழக்கு தொடர்ந்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன் என நீதிபதிகள் சரமாரி கேள்விகளை கேட்டு வருகின்றனர்.
வழக்கு விசாரணை:
கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூலை மாதம் 13 ஆம் தேதி தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் ஸ்ரீநிதி என்ற மாணவி பள்ளி விடுதியில் இருந்து கீழே விழுந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மாணவியின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக மாணவியின் பெற்றோர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாணவி இறப்பு பற்றி பள்ளி நிர்வாகம் சரியான முறையில் விளக்கம் அளிக்கப்படாத நிலையில் மாணவிக்கு ஆதரவாக பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Exams Daily Mobile App Download
ஆனாலும் சரியான விளக்கம் எதுவும் கொடுக்கப்படாத நிலையில் நேற்று கள்ளக்குறிச்சியை சேர்ந்த அந்த தனியார் பள்ளியை பலர் சூறையாடினர். பயங்கரமாக வெடித்த கலவரத்தில் பள்ளி பேருந்துகள் எரிக்கப்பட்டன. மேலும் பள்ளி வளாகங்களும் தீக்கிரையானது. அதனை தொடர்ந்து போலீசார் களமிறங்கி போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி கட்டுப்படுத்தினர். இந்நிலையில் அந்த வழங்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சதீஸ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்துள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று டிஸ்சார்ஜ்? மருத்துவமனை தகவல்!
அப்போது விசாரணை செய்த நீதிபதி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பின் ஏன் போராட்டத்தில் ஈடுபட்டனர் என கேள்வி எழுப்பினார். மேலும் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவியின் இறப்பிற்கு என்ன காரணம் என நீதிபதி கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும் போராட்டம் நடத்த அனுமதி வழங்கியது யார் என நீதிபதி கேள்வி எழுப்பி இருக்கிறார். மாணவியின் அப்பா வெளிநாட்டில் இருந்து கடந்த 14 ஆம் தேதி வந்த பின் தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.