தமிழகத்தின் பிரத்யேக மாப்பிளை சம்பா அரிசி – அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!

0
தமிழகத்தின் பிரத்யேக மாப்பிளை சம்பா அரிசி - அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!
தமிழகத்தின் பிரத்யேக மாப்பிளை சம்பா அரிசி - அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!
தமிழகத்தின் பிரத்யேக மாப்பிளை சம்பா அரிசி – அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!

தமிழகத்தில் பழனி பஞ்சாமிர்தம், கோவை வெட் கிரைண்டர், தஞ்சாவூர் வீணை உட்பட கிட்டத்தட்ட 35 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்க பெற்றுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது புதிய பொருள் ஒன்றுக்கு புவிசார் குறியீடு பெற தமிழக அரசு முயற்சித்து வருவதாக அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

புவிசார் குறியீடு:

இந்தியாவில் புவிசார் குறியீடுகள் சட்டம் 2003ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இதனையடுத்து முதன் முதலில் இந்தியாவில் காஷ்மீரின் குங்குமப்பூவுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு வாய்ந்த பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. ஒரு பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்குவதன் மூலம் அப்பொருளுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும். மேலும் அப்பொருளின் ஏற்றுமதியும் அதிகரிக்கும். அத்துடன் அப்பொருளை வேறு எந்த இடத்திலும் தயாரிக்க முடியாது. அவ்வாறு அனுமதி இன்றி தயாரித்தால் தக்க நடவடிக்கை எடுக்கலாம்.

மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்தில் பண்ருட்டி பலாப்பழம், பழனி பஞ்சாமிர்தம், கடலை மிட்டாய் உள்ளிட்ட 35 பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது மாப்பிள்ளை சம்பா அரிசிக்கு புவிசார் குறியீடு பெற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றான மாப்பிள்ளை சம்பா அரிசியில் இரும்புச் சத்தும், நார்ச்சத்தும் அதிக அளவில் உள்ளது.

ஆதாரில் அட்ரஸ் ப்ரூப் இல்லாமல் முகவரி மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

Exams Daily Mobile App Download

இந்த அரிசி இளவட்ட கல்லை தூக்கக் கூடிய அளவிலான பலத்தை தருமாம் அதனால் தான் இதனை மாப்பிள்ளை சம்பா அரிசி என்று அழைக்கின்றனர். தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மாப்பிள்ளை சம்பா அரிசி விளைவிக்கப்படுகிறது. இந்த அரிசியை உட்கொள்வதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. இத்தகைய மருத்துவ குணங்கள் நிறைந்த மாப்பிள்ளை சம்பா அரிசிக்கு புவிசார் குறியீடு கிடைக்க தமிழக அரசு முயற்சித்து வருவதாகவும் அதனை சர்வதேச அளவில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!