தமிழக ஊர்க்காவல் படை தேர்வு மற்றும் பணிகள் – உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!
ஊர்க்காவல் படை பணிக்கு உரிய விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஊர்க்காவல் படை:
தமிழ்நாட்டில் ஊர்க்காவல் படை 1963ம் ஆண்டு துவக்கப்பட்டது. ஊர்காவல் படைக்கு தேர்வுகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுகின்றனர். ஊர்க்காவல் படையில் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு 200 நாள் மட்டும் பணி வழங்கப்படுகிறது. பொது இடங்களில் கூட்ட நெரிசலை சரி செய்தல், திருவிழா, பண்டிகை நேரங்களில் கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களில், கூட்டத்தை ஒழுங்குபடுத்துதல், கட்சி தலைவர்கள் வருகையின் போதும், அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டத்தில் போதும் சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும் அத்தகைய நேரங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர்.
Wipro நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள் – பதவி, சம்பளம், தகுதி, விண்ணப்ப முறை விளக்கம்!
உள்நாட்டு பாதுகாப்பிற்கு ஊர்க்காவல் படையினர் காவல்துறையுடன் இணைகின்றனர். இயற்கை சீற்றங்களின் போது மக்களுக்கு பேருதவி புரிகின்றனர். ஊர்க்காவல் படையினர் ஒரு முன்கள பணியாளர்களாக செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு காவல்துறையினரை போல சீருடைகளும் வழங்கப்படுகிறது. இவர்கள் போலீசாருக்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் பின்பற்ற வேண்டும்.
தமிழகத்தில் எந்தெந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 – தெளிவுபடுத்த கோரிக்கை!
மேலும் ஊர்க்காவல் படையினருக்கு தவறான பழக்கங்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுடன் பழக்கம் இருக்க கூடாது. இந்த ஊர்க்காவல் படையினர் தேர்வுகள் மற்றும் அவர்களின் பணிக்கு உரிய விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் தினமும் ரூ.560 வீதம் 10 நாள் பணி என்பது குறைந்தபட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேவை எனில் கூடுதல் பணி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Very interested police job ….but age for.31 try it…ilove it police job….