தமிழகத்தில் 4500 அரசு ஊழியர்களின் பட்டியலை சமர்ப்பிக்க உத்தரவு – உயர் நீதிமன்றம் அறிவிப்பு!
4,500 அரசு ஊழியர்களுக்கு புதிய அரசாணையின் படி ஊதிய உயர்வு பணப்பயன்கள் வழங்கப்பட்டிருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள ஊழியர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஊழியர்களின் பட்டியல்
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 7 ஆவது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் சில முரண்பாடுகள் இருந்ததாக கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி 2010 ஆம் ஆண்டு ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், ஊதிய விகிதங்கள் மாற்றியமைக்கப்படும் என அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டது. மேலும், இந்த புதிய ஊதிய விகிதங்கள் 2009 ஆம் ஆண்டிற்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் உள்துறை, கல்வி, வருவாய், சுகாதாரம், நிதி உள்ளிட்ட துறைகளில் 2009 ஆம் ஆண்டிற்கு பிறகு அரசு பணியில் சேர்ந்த தட்டச்சர், சுருக்கெழுத்தர் ஆகிய 4,500 பேருக்கு இந்த அரசாணையின் பலன் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால், தங்களுக்கும் இந்த புதிய விகிதங்களின் அடிப்படையில் 18 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என வேளாண் துறையில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணியில் உள்ள அரசு ஊழியர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
SBI, ICICI, HDFC Bank, Axis Bank, BOB வங்கிகளுக்கு WhatsAppயில் சேவைகள் – எளிய வழிமுறைகள் இதோ!
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 2009 ஆம் ஆண்டிற்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு ஊதிய உயர்வு பணப்பயன்கள் வழங்கப்பட்டிருக்கிறதா என்கிற விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும், 2007 ஆம் ஆண்டுகளில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 4,500 அரசு ஊழியர்களின் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், ஒவ்வொரு ஊழியரும் எந்த துறைக்கு நியமிப்பட்டுள்ளார் மற்றும் ஒவ்வொரு துறைக்கும் எத்தனை பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும், இதில் எத்தனை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு சலுகை வழங்கப்பட்டுள்ளது என்கிற விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
எவ்வளவு கொடுத்தாலும் திருப்தி அடையாத ஆட்கள் தமிழ்நாடு அரசு ஊழியர்கள்