தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான புதிய செயலி – பள்ளிக்கல்வித்துறை அறிமுகம்!!
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விடுப்புகளை பதிவு செய்யவும் ஒப்புதல் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விடுப்பு செயலி:
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகையை பதிவு செய்ய தற்போது கணினி வாயிலாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது விடுப்பு வேண்டி விண்ணப்பிக்க ஏதுவாக புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக சுகாதாரத்துறையில் பணியாற்ற அருமையான வாய்ப்பு – 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்!!
Follow our Instagram for more Latest Updates
தற்போது அரசு பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு வேண்டி எழுத்துப்பூர்வமாக உயர் அலுவலர்களிடம் விண்ணப்பித்து வருகின்றனர். இதனால் ஆசிரியர்களுக்கு கூடுதல் சிரமமும் கால வியரமும் அதிகரிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு ‘லீவ் மேனேஜ்மென்ட் சிஸ்டம்’ என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர் தங்களது ஸ்மார்ட் போன்களில் இச்செயலியை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் தங்களுக்கு விடுப்பு தேவைப்பட்டால் செயலியில் பதிவு செய்ய வேண்டும். இந்த விடுப்பு பதிவை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் சரிபார்த்து ஆசிரியர்களுக்கு ஒப்புதல் அளிப்பார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.