தமிழக அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு நேர்காணல் கிடையாது – TRB தகவல்!
தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்களுக்கு நேர்காணல் நடைபெறுமா என்பது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது
ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்
தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் தற்போது மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல மாவட்டங்களில் உள்ள அரசு பாலிடெக்னீக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணிக்கு மொத்தம் 1060 காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்த விரிவுரையாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 16,17,18 ஆகியத் தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் விரிவுரையாளர் தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பம் செய்தவர்கள் தங்களின் கல்வித்தகுதி சான்றிதழ், பணி அனுபவம் சான்றிதழ் தொடர்பான கூடுதல் ஆவணங்களை 2022 மார்ச் 11ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரையில் பதிவேற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. தற்பொழுது முதல் கட்டமாக Textile Technology, Production Engineering, Printing Technology, Physics, Chemistry, English மற்றும் Mathematics ஆகியப் பாடங்களில் சான்றிதழ் சரிபார்ப்புப் பட்டியலில் இடம் பெற்றுள்ள வேலைக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு ஜூலை 16ம் தேதி நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – சம்பள உயர்வு அறிவிப்பு!
மற்ற பாடங்களுக்கு 17,18 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்களுக்கு நேர்காணல் இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. அது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அதன் படி பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்களுக்கு நேர்காணல் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.