ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஆய்வு நடத்த அரசு உத்தரவு!
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அட்டைதாரர்களுக்கு முறையாக தரமான பொருட்கள் வழங்குவதில்லை என்றும் மக்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
ரேஷன் கடை:
தமிழகத்தில் ரேஷன் கார்டுகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் மலிவு விலையில் மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை பெற்று வருகின்றனர். தற்போது ரேஷன் கடைகள் வாயிலாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அத்துடன் இருப்பிட சான்றாக ரேஷன் கார்டு கருத்தில் கொள்ளப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
இதனால் பலரும் ரேஷன் கார்டுகளை பெற முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்க மறுப்பதாகவும், மாத கடைசியில் பொருட்களை ஊழியர்கள் வழங்குவதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்து வருகிறது. இந்த புகார்கள் அனைத்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
பொருட்கள் டெலிவரி செய்வதில் புது யுக்தி.. அமேசான் அறிமுகப்படுத்தியுள்ள அசத்தலான Air Delivery Drone!
Follow our Instagram for more Latest Updates
இதனையடுத்து ரேஷன் கடைகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அங்கு பொருட்கள் வழங்கும் முறைகள் குறித்து கண்காணிக்க வேண்டும் என்றும் அரசு கூட்டுறவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் தடையில்லாமல் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.