தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஈட்டிய விடுப்பு குறைப்பு!
தமிழகத்தில் உள்ள அரசுத்துறை ஊழியர்களுக்கு ஊதியமில்லா அசாதாரண விடுப்புக்கு மட்டுமே ஈட்டிய விடுப்பு குறைக்கப்பட வேண்டும் என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரப்பட்ட கேள்விக்கு அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஈட்டிய விடுப்பு
பொதுவாக அரசுத் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பொது விடுமுறை, தேசிய விடுமுறை ஆகியவற்றுடன் சேர்த்து ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட சில நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும். அந்த வகையில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாட்களை ஊழியர்கள் தங்களது சொந்த தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம். இருப்பினும் இந்த விடுமுறை நாட்களை பயன்படுத்தாத ஊழியர்கள் அதற்கான சம்பளத் தொகையை பணமாக பெற்றுக்கொள்ள முடியும்.
TN Job “FB Group” Join Now
இந்த செயல்முறை ஈட்டிய விடுப்பு என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் இது போன்ற ஈட்டிய விடுப்பு சலுகைகள் அனைத்து அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரசு தரப்பில் இருந்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, ஊதியமில்லா அசாதாரண விடுப்பு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பள்ளிக்கல்வி ஆணையரகம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னையில் நாளை (ஜூலை 6) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு விடுப்பு விதிகள் (TNLR) விதி (9) aல் உள்ளபடி ஊதியமில்லா அசாதாரண விடுப்புக்கு மட்டுமே ஈட்டிய விடுப்பு குறைக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, ஊதியமில்லா தமிழ்நாடு விடுப்பு விதிகளின் கீழ் அசாதாரண விடுப்புக்கு மட்டுமே ஈட்டிய விடுப்பு குறைக்கப்பட வேண்டும் என மனுதாரர் கோரிய தகவல்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.