தமிழக அரசு வருவாய்த் துறையில் 3000 காலிப்பணியிடங்கள் – அமைச்சர் அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 3000 வருவாய் உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ் ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அரசு காலிப்பணியிடங்கள்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன் விளைவாக கடந்த ஆண்டு முதல் அரசு துறைகளில் காலியாக உள்ள பல இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்நிலையில் திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ் ஆர். ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 43,803 மனுக்கள் முதல்வர் திட்டத்திற்கு வந்துள்ளன. அதில் 13,462 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் இந்த மாவட்டங்களில் பட்டா வழங்குதல், சர்வே செய்வதில் இருக்கும் தாமதத்தை உடனடியாக நிவர்த்தி செய்தல், வாரந்தோறும் குறைகளை நிவர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அசாமில் 5 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல் – அரசு அறிவிப்பு!
மேலும் அரசின் உழவர் பாதுகாப்பு திட்டத்தை விரிவுபடுத்தவும், இந்த திட்டம் குறித்து பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பலன்களை அதிகரிக்க ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான தாலுகா உள்ளிட்ட வருவாய் கோட்டங்கள் பிரிக்கப்படாமல் உள்ளன. எனவே அதற்கான ஆணை விரைவில் வெளியிடப்படும்.
வருவாய்த் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்து தமிழ்நாடு அரசு தேர்வாணையத்திடம் கேட்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக வருவாய்த் துறையில் 3000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. விரைவில் இந்த பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் காலியாகவுள்ள 2,726 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கூறியுள்ளார்.