திருப்பதி செல்ல தமிழக அரசின் புதிய சுற்றுலா திட்டம் – முக்கிய அறிக்கை வெளியீடு!
ஆந்திரா மாநிலம் திருப்பதி எழுமையான் கோவிலில் ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வரும் நிலையில் தமிழக அரசு சென்னையில் இருந்து தினசரி திருப்பதி சுற்றுலாவை சிறந்த முறையில் செய்து வருகிறது. இது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
திருப்பதி சுற்றுலா:
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து தரிசனம் செய்ய வருவார்கள். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து பக்தர்கள் மீண்டும் தரிசனம் செய்ய படையெடுக்க தொடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் சென்னையில் இருந்து திருப்பதி வர நினைப்பவர்களுக்கு அரசு புதிய வசதியை ஏற்பாடு செய்துள்ளது.
Exams Daily Mobile App Download
அது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் சென்னையில் இருந்து தினசரி திருப்பதி சுற்றுலாவை பொதுமக்களின் பேராதரவோடு மிக சிறந்த முறையில் செய்து வருகிறது. இந்நிலையில் இனிமேல் தமிழக முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி மற்ற முக்கிய நகரங்களில் இருந்தும் இந்த சுற்றுலாவை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் படி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் திருச்சி, மதுரை, சேலம் மற்றும் கோவை போன்ற இடங்களில் தினசரி திருப்பதி சுற்றுலா ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் இயக்கப்பட இருக்கிறது.
Post Office தினசரி ரூ.50 முதலீட்டில் ரூ.35 லட்சம் வரை ரிட்டன்ஸ் – கிராம சுரக்ஷா யோஜனா திட்டம்
இந்த சுற்றுலாவில் கலந்து கொள்ளும் அனைத்து பயணிகளுக்கும் இருவேளை சைவ உணவு, குளிர்சாதன சொகுசு பேருந்து வசதி மற்றும் சிறப்பு தரிசன பயணச்சீட்டு உட்பட கட்டணமாக, திருச்சியில் இருந்து பெரியவர்களுக்கு ரூ.3,330ம், சிறியவர்களுக்கு ரூ.3000ம், சேலத்தில் இருந்து பெரியவர்களுக்கு ரூ.3,330ம், சிறியவர்களுக்கு ரூ.3000ம், மதுரையில் இருந்து பெரியவர்களுக்கு ரூ.4,000ம், சிறியவர்களுக்கு ரூ.3,700ம் கோவையில் இருந்து பெரியவர்களுக்கு ரூ.4,000ம், சிறியவர்களுக்கு ரூ.3,700ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சுற்றுலாவில் பயணம் செய்ய 7 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.