தமிழக அரசு பள்ளி குழந்தைகளுக்கு பால் வழங்கும் திட்டம் – அமைச்சர் விளக்கம்!
தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு அரசு சார்பில் பால் வழங்கப்படும் என்று அமைச்சர் நாசர் அவர்கள் தெரிவித்துள்ளார். இதற்காக ஆவின் நிறுவனம் விவசாயிகளிடம் பாலை கொள்முதல் செய்யும் என்று அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
பால் வழங்கும் திட்டம்:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடரின் இரண்டாவது அலையின் வேகம் வெகுவாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நிர்வாக பணிகளுக்காக திறக்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. தற்போது புதிய கல்வி ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் பள்ளியில் மாணவர் சேர்க்கை பணிகளும் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு – புதிய தளர்வுகள் அமல்!
மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தற்போது இலவச பாட புத்தகங்களும் வழங்கப்பட்டது. பள்ளிகளில் இன்னும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படாத நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாகவும் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமைச்சர் நாசர் அவர்கள் அரசு பள்ளி குழந்தைகளுக்கான முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
TN Job “FB Group” Join Now
அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி குழந்தைகளுக்கு பால் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும் இதற்கு விவசாயிகள் உற்பத்தி செய்யும் பாலை ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்யும் என்றும் அதேபோல் ஆவின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை நிர்ணயிக்க தனிக்குழு அமைக்கப்படும் என்றும் அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.