தமிழகத்தில் சொத்து வரி செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – அரசு அதிரடி!

0
தமிழகத்தில் சொத்து வரி செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை - அரசு அதிரடி!
தமிழகத்தில் சொத்து வரி செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை - அரசு அதிரடி!
தமிழகத்தில் சொத்து வரி செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – அரசு அதிரடி!

தமிழகத்தில் சொத்து வரி, தொழில் வரி செலுத்தாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் வரி செலுத்தாமல் இருபவர்களுக்கு அபராத நடவடிக்கை மற்றும் உரிமையாளர்களின் சொத்து சீல் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரி விதிப்பு:

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் அவர்கள் வைத்திருக்கும் சொத்துக்கள் மதிப்பின் அடிப்படையில் அரசாங்கத்திற்கு வரி செலுத்துவது முக்கிய கடமையாகும். அந்த வகையில் ஆண்டுதோறும் அரசு சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் இணைப்பு வரி, பாதாள வரி உள்ளிட்ட வரிகளை விதித்து வருகிறது. மேலும் இந்த வரிவிதிப்பை செலுத்த தவறுபவர்களுக்ளு அபராத கட்டணங்களும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசின் 15வது நிதி ஆணையத்தின் நிபந்தனையின் அடிப்படையில் தமிழகத்தில் சொத்து வரி, தொழில் வரி உயர்வு குறித்து அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

அதன்படி, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 600 சதுர அடிக்குக் குறைவான குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவிகிதமும், 600 முதல் 1,200 சதுர அடி வரை உள்ள குடியிருப்புகளுக்கு 75 சதவிகிதமும், 1,201 முதல் 1,800 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்புகளுக்கு நூறு சதவிகிதமும் சொத்து வரி உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இம்மாத இறுதிக்குள் சொத்து வரி, தொழில் வரி இந்த மாதத்திற்குள் செலுத்தாவிட்டால் அவர்கள் மீது அபராத நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை பெசன்ட் நகரில் நாளை வாகனமில்லா ஞாயிற்றுகிழமை – வண்டிகள் ஓடாது!

தமிழகத்தில் சொத்து வரி ஆண்டுக்கு இருமுறை அரையாண்டு வீதம் வசூலிக்கப்படுகிறது. மேலும் சொத்து வரி உயர்வு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வரி உயர்வின் மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.1200 கோடி லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை அடுத்து சொத்து வரியை வசூலிக்க வருவாய் துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழகத்தில் புதிய சொத்து வரி மட்டுமல்லாமல் ஏற்கனவே செலுத்தாமல் நிலுவையில் உள்ள சொத்து வரியையும் செலுத்த உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அதன்படி இம்மாத இறுதிக்குள் வரி செலுத்தாதவர்கள் மீது அபராத நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!