தமிழக அரசு பள்ளிகளில் TC இன்றி மாணவர் சேர்க்கை – கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

0
தமிழக அரசு பள்ளிகளில் TC இன்றி மாணவர் சேர்க்கை - கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழக அரசு பள்ளிகளில் TC இன்றி மாணவர் சேர்க்கை - கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழக அரசு பள்ளிகளில் TC இன்றி மாணவர் சேர்க்கை – கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

தமிழக அரசு பள்ளிகளில் தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், எட்டாம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களை அரசு பள்ளிகளில் மாற்றுச் சான்றிதழ் (TC) இன்றி சேர்க்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மாணவர் சேர்க்கை:

தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் தீவிரம் குறைந்து வருவதால் கடந்த 14ம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் நிர்வாக பணிகளுக்காக திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதை அடுத்து கடந்த 14ம் தேதி முதல் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது தனியார் பள்ளிகளை ஒப்பிடுகையில், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிக அளவில் உள்ளது. தற்போது மாணவர் சேர்க்கை குறித்து பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிக்கை ஒன்றை அறிவித்துள்ளது.

பள்ளி, கல்லூரிகள் ஜூலை 1 முதல் மீண்டும் திறப்பு – பெற்றோர்கள் எதிர்ப்பு!

அதன்படி அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், தங்கள் பள்ளியில் உள்ள கடைசி வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கும், பள்ளியை விட்டு வேறு பள்ளிக்கு மாற விரும்பும் மாணவர்களுக்கும் மாற்றுச் சான்றிதழ் கொடுப்பதற்கான அனைத்து விவரங்களையும் கல்வி தகவல் மேலாண்மை முறைமை என்ற இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் கேட்டால் உடனடியாக பதிவிறக்கம் செய்து தர வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

அனைவருக்கும் கல்வி சட்டத்தின் படி மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்படுவதால் தனியார் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், மாற்றுச் சான்றிதழ் இன்றி அரசு பள்ளிகளில் சேர்ந்து கொள்ள முடியும். அரசு பள்ளிகளில் சேர்க்கையின் போது மாணவர்கள் ஆதார் எண்ணை மட்டும் கொடுத்தால் போதும். பின் மாணவர்கள் பயின்ற தனியார் பள்ளிகளில் மாற்றுச் சான்றிதழை வழங்க கல்வி தகவல் மேலாண்மை முறையின் மூலம் வேண்டுகோள் விடுக்க இயலும்.

ஏற்கனவே கடந்த 2020-21ம் கல்வி ஆண்டில் அதிக அளவிலான மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் இன்றி அரசு பள்ளிகளில் சேர்ந்து வந்தனர். இந்த நடைமுறை புதிய கல்வி ஆண்டிலும் தொடருமா என்று பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது அவர்கள் குழப்பம் தீரும் வகையில் பள்ளிக் கல்வித்துறை இந்த விளக்கத்தை அளித்துள்ளது. இதனால் பெற்றோர்கள் சற்று நிம்மதி அடைந்து உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!