தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங் – ஜூலை இறுதிக்குள் நடத்த முடிவு!!
தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆண்டு தோறும் விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான கவுன்சிலிங்கை ஜூலை மாதம் இறுதிக்குள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் இடமாறுதல்:
தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை குறைந்து வரும் காரணத்தால் பள்ளிகள் திறப்பு ஆசிரியர்கள் இடமாற்றம் போன்ற பணிகளில் தற்போது பள்ளிக் கல்வித்துறை ஆர்வம் செலுத்தி வருகிறது. ஆண்டு தோறும் தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங்கை ஆன்லைன் மூலம் நடத்தி வருகிறது. இதன் மூலம் தங்களுக்கு விருப்பமான பகுதிக்கு ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வந்தனர்.
தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் திறப்பு? தலைமை செயலர் முக்கிய ஆலோசனை!!
இந்நிலையில் கடந்த ஆண்டு கொரோனா நோய்பரவல் அச்சம் காரணமாக பள்ளிகள் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக கடந்த ஆண்டு ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படவில்லை. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு இந்த ஆண்டு ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த அனுமதி வழங்கியுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனை தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை பள்ளிகள் திறப்பதற்கு முன்பு கவுன்சிலிங் நடத்த முடிவு செய்துள்ளது. மேலும் இந்த கவுன்சிலிங்கை ஜூலை மாதம் இறுதிக்குள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை சேகரிக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அரசு பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி, முதுநிலை பட்டதாரி, சிறப்பு பாடப்பிரிவுகள், கணினி போன்ற அனைத்து வகை ஆசிரியர்கள் பதவிகளை பட்டியலிட்டு பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.