தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு – அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த ஆண்டு முதல் திறக்கப்படாத நிலையில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு இந்த ஆண்டு நடத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் கலந்தாய்வு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் கடந்த ஆண்டு நடைபெற இருந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படாமல் இருந்தது.
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு ரொக்கப்பரிசுடன் போட்டிகள் – முழு விபரம் இதோ!
இந்நிலையில் இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், கொரோனா பரவல் காரணமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தனித்தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். பின்னர் பேசிய அவர் வழக்கமாக பள்ளிகள் திறக்கப்பட்டால் மே, ஜூன் மாதங்களில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். ஆனால் கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால் இந்த ஆண்டு நடத்துவதில் காலதாமதம் ஏற்படுகிறது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் இந்த கலந்தாய்வு நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா ஊரடங்கு தளர்வுகளில் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் எனவும், ஆன்லைன் வகுப்பு, மாணவர் சேர்க்கை, அலுவலக பணிகள் ஆகியவற்றை மேற்கோள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே இதனை பயன்படுத்தி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடத்த முதல்வரிடம் ஆலோசனை நடத்தி முடிவு வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார்.