தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் செயல்திறன் மதிப்பீடு அறிக்கை – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

0
தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் செயல்திறன் மதிப்பீடு அறிக்கை - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் செயல்திறன் மதிப்பீடு அறிக்கை - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் செயல்திறன் மதிப்பீடு அறிக்கை – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

தமிழக அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த அரசு சார்பில் ஏகப்பட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் செயல்திறன் மதிப்பீடு குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது

ஆசிரியர்கள் செயல்திறன் மதிப்பீடு

தமிழக அரசின் கீழ் ஏகப்பட்ட நடுநிலை, மேல்நிலை, உயர்நிலை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் பல மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்த மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த வேண்டும் என அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு முக்கிய காரணமாக ஆசிரியர்கள் தான் இருக்க வேண்டும். அதனால் ஆசிரியர்கள் செயல்திறன் மதிப்பீடு குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில், மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குவதை உறுதிசெய்ய, அனைத்து ஆசிரியர்களும் சுயமதிப்பீடு செய்து தங்களை மேம்படுத்திக் கொள்ள ஆசிரியர் செயல்திறன் மதிப்பீடு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வோர் ஆசிரியரும் தங்கள் வகுப்பறை நிகழ்வுகளை வடிவமைத்து, மாணவர் கற்றல் நிலையை மேம்படுத்துதல் உள்ளிட்ட செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் இந்த செயல்திறன்களை ஒவ்வொரு ஆசிரியரும் அடைந்து, அதை முழுமையாகப் பின்பற்றுவதை சுயமாக மதிப்பீடு செய்ய அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள் மேலாய்வுக் குறிப்பு எழுதித்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுயமதிப்பீட்டுக்கான வழிகாட்டுதல்களை தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த வழிகாட்டுதல்களை தொடக்க நிலை ஆசிரியர்கள் முதல் மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் வரை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சொத்து வரி, மின் கட்டண உயர்வை தொடர்ந்து அதிகரித்த குடிநீர் வரி – பொதுமக்கள் அவதி!

இதற்கான மாதிரிப் படிவங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும் கிடைக்க முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆசிரியர் செயல்திறன் மதிப்பீட்டு பணிக்காக அரசு ரூ.30.23லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிதி, பள்ளிகளில் உள்ள இணையதள செலவினங்களுக்காக சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு விடுவிக்கப்படுகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!