தமிழக அரசு பள்ளி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – கல்வித்துறை வெளியிட்ட புதிய உத்தரவு!
தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகமாக இருக்கும் நிலையில், ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் மாற்றுப் பணியில் உள்ள 182 ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆசிரியர்கள் நியமனம்:
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிக்கு நிகராக கல்வி கொடுக்க வேண்டும் என்பதில் அரசு குறிக்கோளுடன் இயங்கி வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல சலுகைகளும், வகுப்பறைகளில் வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருக்கிறது. ஆனால் அதற்கு தகுந்தாற் போல ஆசிரியர்கள் இல்லாமல் இருக்கின்றனர்.
அதனால் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 13,330 ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்ய இருப்பதாக கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் அதில் 20 சதவீதம் ஆசிரியர்கள் மட்டுமே இதுவரை நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதனால் பள்ளிகளில் இன்னும் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 182 தற்காலிக ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழுக்கள் வாயிலாக இல்லம் தேடித் திட்ட கட்டடங்கள், தயாரிப்பு பணி, மொழிபெயர்ப்பு பணி, பாடப்பொருள் தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளனர்.
இது தான் தங்கம் வாங்க நல்ல நேரம்.. மளமளவென சரிந்த விலை – மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!
Exams Daily Mobile App Download
அவ்வாறு பணியில் இருக்கும் 182 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம் என தற்போது பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் ரூ7500, ரூ10,000, ரூ12000 தொகுப்பு ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்