தமிழக அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி – காவல் ஆணையாளர் துவக்கம்!

0
தமிழக அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி - காவல் ஆணையாளர் துவக்கம்!
தமிழக அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி - காவல் ஆணையாளர் துவக்கம்!
தமிழக அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி – காவல் ஆணையாளர் துவக்கம்!

தமிழகத்தில் இளைய சமுதாயம் போதை பொருட்களுக்கு அடிமையாகி எதிர் காலத்தை வீணாக்காமல் இருப்பதற்கு காவல் அதிகாரிகள் தலைமையில், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் கோடம்பாக்கம் அரசு மேல் நிலைப்பள்ளியில் “வேண்டாம் போதை” (No to Drugs) விழிப்புணர்வு நிகழ்ச்சி துவங்கி வைத்தார்.

வேண்டாம் போதை :

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க,’ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0’என்ற சிறப்பு நடவடிக்கையை தமிழக காவல்துறை மேற்கொண்டது. அதில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா போதை பொருட்களை ஒழிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனையில் ஈடுபடுவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Exams Daily Mobile App Download

மேலும், தொடர்ச்சியாக இந்த குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து வந்தனர். இதனால் கஞ்சா, குட்கா போதை பொருட்களின் நடமாட்டம் வெகு அளவில் குறைந்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஜூன் 26-ம் நாள் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கடந்த 24.06.2022 காலை காவல் ஆணையரகத்தில், சென்னை பெருநகர காவல் சார்பாக, போதைப் பொருட்களுக்கு எதிரான வாசகங்கள் மற்றும் அறிவுரைகள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகள் ,சுவரொட்டிகள் ஆகியவற்றை வெளியிட்டார்.

அனைத்து பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 4 முதல் விடுமுறை – முக்கிய அறிவிப்பு!

இதனை தொடர்ந்து சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இன்று (01.07.2022) கோடம்பாக்கம், பதிப்பக செம்மல் கே.கணபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட “வேண்டாம் போதை” விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் இணை ஆணையாளர் (வடக்கு) ரம்யாபாரதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், தனியார் தொலைக்காட்சி ஆசிரியர் தியாகச் செம்மல், முஹம்மது நவீன் (District Governor Lions Club), பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!