தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு – பள்ளிகள் திறப்பு எதிரொலி!
தமிழகத்தில் 40 நாட்களுக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. மாணவ,மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு செல்கின்றனர். மேலும் பொது தேர்வுகளுக்கு குறைவான நாட்களே உள்ளதால் விரைவில் பாடப்பகுதிகளை மாணவர்களுக்கு நடத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.
அதிரடியான உத்தரவு:
தமிழகத்தில் புத்தாண்டு முதலே கொரோனா பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வந்தது. இதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகள் ஜனவரி 31 வரை மூடப்பட்டது. மேலும் மாணவர்களின் கற்றல் முறையில் பாதிப்பு ஏற்பட கூடாது என தமிழக அரசு ஆன்லைன் முறையில் வகுப்புகளை நடத்த கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு போட்டது. மேலும் ஊரடங்குகள் கடமையாக்கப்பட்டு இருந்தது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் – சுகாதாரத்துறை செயலாளர்!
இந்நிலையில், இன்னும் எத்தனை நாட்களுக்கு பள்ளிகள் மூடி இருக்கும் என பல்வேறு தரப்பிலிருந்து கேள்விகள் எழுந்தன. கடந்த வருடம் பொதுத் தேர்வுகள் எழுதாமல் 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்த வகையில் இந்த வருடமும் தேர்வுகள் இல்லாமல் மாணவர்கள் தேர்ச்சி அடைவார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த வகையில் அண்மையில் தமிழக முதல்வர் பள்ளி கல்லூரிகள் பிப்ரவரி 1 முதல் திறக்கப்படும் என உத்தரவிட்டார்.
ஐபிஎல் 2022: மெகா ஏலத்தில் இருந்து விலகிய கிறிஸ் கெயில் – ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்த அறிவிப்பு அடிப்படையில் ஒரு மாதத்துக்கு மேலாக மூடப்பட்டிருந்ததால் பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளை தூய்மை செய்யும் பணி கடந்த இரு நாட்களாக நடைபெற்றது. மேலும் மாணவர்கள், ஆசிரியர்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து பொது தேர்வுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ஆசிரியர்கள், பாடப்பகுதிகளை எளிமையான முறையில் மாணவர்களுக்கு புரியும் வகையில் விரைவில் நடத்தி முடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.