தமிழக அரசு ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – உணவு ஆணையம் அறிவுறுத்தல்!
தமிழகத்தில் மலைவாழ் மக்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோருக்கு, முன்னுரிமை பிரிவு ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என மாநில உணவு ஆணையம் நுகர்பொருள் வழங்கல் துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.
முன்னுரிமை ரேஷன் கார்டுகள்:
தமிழகத்தில் நியாய விலை கடைகளில் மக்கள் அத்தியாவசிய பொருட்களை குறைவான விலையில் பெற்று பயனடையும் வகையும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. ரேஷன் கார்டு தேவைப்படுவோர் உணவு வழங்கல் துறையில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் மக்கள் மாதந்தோறும் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை போன்ற உணவு பொருட்களை மலிவான விலையில் வாங்குகின்றனர். தற்போது ஊரடங்கு காலத்தில் ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் அட்டைகள் வைத்திருப்போருக்கு இலவசமாக 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. மேலும் நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டது.
சுயதொழில் தொடங்க விரும்புவர்களுக்கு மானியத்துடன் நிதியுதவி – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
உணவு வழங்கல் துறை விண்ணப்பிப்பவர்க்கு முன்னுரிமை கார்டுகளை வழங்குகிறது. இவர்கள் அரிசி அட்டைதாரர்கள் எனப்படுகின்றனர். இவர்கள் அரிசி மற்றும் அனைத்து வகை பொருட்களும் வாங்க தகுதியுடையவர்கள். இவர்களுக்கு மாதந்தோறும் அரிசி கூடுதலாக வழங்கப்படுகிறது. முன்னுரிமை அல்லாத சர்க்கரை கார்டுக்கு அரிசி அளவு குறைக்கப்படுகிறது. பொதுமக்கள் விருப்பத்தின் படி, ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. முன்னுரிமையற்ற சர்க்கரை கார்டுக்கு விண்ணப்பித்தால் ரேஷன் கார்டு வழங்கப்படும் என அதிகாரிகள் கூறுவதாக புகார்கள் எழுகிறது. ஏதேனும் காரணங்களை கூறி அதிகாரிகள் விண்ணப்பத்தை நிராகரித்து விடுகின்றனர்.
TN Job “FB Group” Join Now
அதனால் மாற்றுத்திறனாளிகள், விதவைகள் என ஏழ்மை நிலையில் உள்ள பலர் முன்னுரிமை அல்லத சர்க்கரை கார்டுகளை வாங்கி உள்ளனர். அவர்களுக்கு, இலவச அரிசி உள்ளிட்ட அரசின் சலுகைகள் கிடைப்பதில்லை. இது தொடர்பாக மாநில உணவு ஆணையத்திற்கு புகார்கள் சென்றதையடுத்து, மலைவாழ் மக்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோருக்கு, முன்னுரிமை பிரிவு ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என மாநில உணவு ஆணையம் நுகர்பொருள் வழங்கல் துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.