தமிழக அரசு வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்க அவகாசம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிப்பை புதுப்பிக்க தவறியவர்கள் நடப்பு மாதம் (27.08.2021) தேதிக்குள் புதுப்பித்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு புதுப்பிப்பு:
தமிழகத்தில் அரசு பணி பெற அரசின் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். மூன்று ஆண்டிற்கு ஒரு முறை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க வேண்டும். வேலை வாய்ப்பில் பதிவு செய்திருந்தால் முன்னுரிமையின் அடிப்படையில் அரசு பணி வழங்கப்படும். இணையத்தின் மூலமாகவோ அல்லது நேரடியாக வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கோ சென்று பதிவு செய்து புதுப்பித்து கொள்ளலாம். தற்போது கொரோனா பேரிடர் காலம் நிலவுவதால் ஏராளமானோர் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.
ஆகஸ்ட் 11ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இதனை கருத்திற்கொண்டு அரசு, வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்து அதை புதுப்பித்து 5 ஆண்டுகள் ஆகியும் பணி கிடைக்காதவர்களுக்கு மாதந்தோறும் உதவி தொகை வழங்கும் திடடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்களும் வரவேற்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2017 , 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் வேலை வாய்ப்பு பாதிப்பை புதுப்பிக்க தவறியவர்கள் நடப்பு மாதம் (27.08.2021) தேதிக்குள் புதுப்பித்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
இணையம் வாயிலாக வேலை வாய்ப்பை புதுப்பித்து கொள்ளலாம். இணையத்தளம் வாயிலாக புதுப்பிக்க இயலாதவர்கள் சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு அஞ்சல் மூலமாக விண்ணபித்து புதுப்பித்து கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வேலைவாய்ப்பை புதுப்பிக்க தவறியவர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால அவகாசத்தை பயன்படுத்தி புதுப்பித்து கொள்ளுமாறு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.