தமிழக அரசில் 5ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகாவில் கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தாசில்தார் தெரிவித்துள்ளார்.
கிராம உதவியாளர்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்ததை அடுத்து அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அளித்து வருகிறது. இந்த நிலையில் அரசு மற்றும் தனியார் துறை மக்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்க முன்வந்துள்ளனர். அந்த வகையில் தற்போது திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகாவில் 5 கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இது குறித்து காங்கேயம் தாசில்தார் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – அடுத்தடுத்து வெளிவரும் மோசடிகள்!
21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிப்போர் சம்பந்தப்பட்ட தாலுகாவில் வசிப்பவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வெள்ளைத்தாளில் உங்களது சுய விரவ குறிப்புகளை எழுதி அனுப்பவும். அதனுடன் சேர்ந்து கல்வித்தகுதி சான்றிதழ், வேலைவாய்ப்பக பதிவு நகல், சாதி சான்று நகல், கல்வி மாற்று சான்று நகல், மதிப்பெண் சான்று நகல் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும். தகுதியுள்ள நபர்கள் போட்டித்தேர்வின் மூலம் நேரடியாக பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு அடுத்த வாரம் முதல் ரூ.5000 நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு!
மேற்சொன்ன சான்றிதழ்கள் ஏதேனும் இல்லையெனில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை காங்கேயம் தாலுகா அலுவலகத்துக்கு டிசம்பர் 13ம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும். மேலும் அறிவித்துள்ள தேதிக்கு பிறகு வரப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும், தபால் தாமதங்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.