தமிழகத்தில் ஆவின் ஆரஞ்ச் பால் பாக்கெட் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்வு – அரசு அதிரடி உத்தரவு!

0
தமிழகத்தில் ஆவின் ஆரஞ்ச் பால் பாக்கெட் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்வு - அரசு அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் ஆவின் ஆரஞ்ச் பால் பாக்கெட் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்வு – அரசு அதிரடி உத்தரவு!

தமிழக அரசின் கீழ் மக்களுக்கு தரமான பால் வழங்கும் நோக்கில் ஆவின் நிறுவனம் இயங்கி வருகிறது. அந்த வகையில் நவம்பர் 5ம் தேதி முதல் ஆவின் பால் கொள்முதல் ரூ.44 ஆக உயர இருப்பதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆவின் பால் விலை:

தமிழக அரசின் நிறுவனமான ஆவின் மூலமாக குறைந்த விலையில் அரசு பால் வழங்கி வருகிறது. மேலும் இந்த பால் தரமானதாக இருப்பதால் மக்கள் பலர் இதன் மூலம் பயனடைகின்றனர். மேலும் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் ஆவின் பால் விலையை குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் ஆவின் நிறுவனம் கிராம அளவில் 9354 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட அளவில் 27 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள், மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என்ற மூன்றடுக்கு கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது

Exams Daily Mobile App Download

மேலும் இந்த நிறுவனத்தின் மூலம் உள்ள 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்களை கொண்டு ஒரு நாளுக்கு 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. அதில் தமிழ்நாடு முழுவதும் 30 லட்சம் பால் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த 19.08.2019 முதல் பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ 32 எனவும், எருமைப்பால் கொள்முதல் லிட்டருக்கு ரூ. 41 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதன் பின் 16.5.2021 தேதி முதல் விற்பனை விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ. 3 குறைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதுதான் சரியான நேரம்.. உடனே கிளம்புங்க – அதிரடியாக குறைந்துள்ள தங்கத்தின் விலை!

Follow our Instagram for more Latest Updates

அந்த வகையில் பால்கூட்டுறவு அமைப்புகளின் முக்கிய நோக்கமே பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான கொள்முதல் விலையையும், பால் நுகர்வோர்களுக்கு தரமான பாலை நியாயமான விலையில் விற்பனை செய்ய வேண்டும் என்பதாகும். அதனால் பால் உற்பத்தியாளர்கள் பால்கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் கோரிக்கையை ஏற்று பசும்பால் கொள்முதல் விலை ரூ. 32 இருந்து ரூ. 35 ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலை ரூ. 41லிருந்து, ரூ.44 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வானது 05.11.2022தேதியில் இருந்து அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் ஆவின் ஆரஞ்ச் பால் பாக்கெட் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்ந்து இருக்கிறது. மேலும் அட்டைதாரர்களுக்கு விலை மாற்றம் இன்றி ரூ.46க்கு ஒரு லிட்டர் பால் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!