தமிழகத்தில் 1 முதல் 11ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு – கல்வி உதவித்தொகை அறிவிப்பு!

0
தமிழகத்தில் 1 முதல் 11ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு - கல்வி உதவித்தொகை அறிவிப்பு!
தமிழகத்தில் 1 முதல் 11ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு - கல்வி உதவித்தொகை அறிவிப்பு!
தமிழகத்தில் 1 முதல் 11ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு – கல்வி உதவித்தொகை அறிவிப்பு!

மத்திய மற்றும் மாநில அரசுகள் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வி உதவித்தொகை:

தமிழக அரசு படித்த இளைஞர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் உதவிகளை செய்து வருகிறது. அனைவரும் கல்வி பெற வேண்டும் எனபதை ஒரே நோக்கமாக கொண்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், மடிக்கணினி, சைக்கிள், சீருடை, புத்தக பை மற்றும் உதவித்தொகை என மாணவர்களை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

2021 – 2022ம் கல்வியாண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகையாகவும், 11 ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரையிலான மாணவர்களுக்கு மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும், தொழில் கல்வி, தொழில் நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி, வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் ரத்து – அமைச்சர் அறிவிப்பு!

இதற்கு ஆர்வமுடையவர்கள் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு நவம்பர் 15ம் தேதி வரையும், பள்ளி மேற்படிப்பு (ம) தகுதி, வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு நவ.30ம் தேதி வரையிலும் விண்ணப்பிக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்த மேலும் விவரங்களை அறிய மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!