போடு.. வேற லெவல்.. தமிழக மக்களுக்கு தீபாவளிக்கு பரிசு அளித்த அரசு.. கடன்கள் அதிரடி தள்ளுப்படி!!
தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவை இன்னும் ஒரு வாரத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான ரசீதுகள் வழங்கப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.
கடன்கள் தள்ளுபடி:
தமிழகத்தில் பெண்களின் வசதிக்காக பல மகளிர் சுயஉதவிக் குழுக்கள் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கி வருகின்றனர். இந்நிலையில் அந்த மகளிர் சுயஉதவிக் குழு மூலமாக அவசரத்திற்கு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த கடன்கள் திரும்ப வசூலிக்க முடியாத நிலையில் இருப்பதால், அதனை தள்ளுபடி செய்து ரசீது வழங்கப்படும் என அரசு ஏற்கனவே அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில் தற்போது ராயபுரத்தில் கூட்டுறவு வங்கியின் புதிய கிளையை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மிக நெருக்கடியான இந்த பகுதியில் கூட்டுறவு வங்கி அமைக்கப்பட்டிருப்பது இந்த வட்டாரத்தில் இருக்கக்கூடிய மகளிருக்கு பல வகையில் பயன் தரும் என தெரிவித்தார். மேலும் மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், அதன் பின் இது குறித்து பணிகள் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக முதல்வர் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனே, 2750 கோடி ரூபாய் மகளிர் சுய உதவிக் கடனைத் தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிட்டார். இன்னும் ஒரு வாரத்துக்குள் அதற்கான பணிகள் முடிக்கப்பட்டு, எப்படி நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டதோ அதுபோல சுய உதவி குழுக்களின் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்