தமிழக அரசின் இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டம் – முதல்வர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஆடு, மாடு வழங்கும் திட்டம் தொடரும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று அறிவித்து உள்ளார்.
முதல்வர் அறிவிப்பு:
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் இலவசமாக ஆடு, மாடு வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. குறிப்பாக கிராமபுறத்தில் உள்ள 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் கால்நடை வளர்ப்பை சார்ந்துள்ளனர். அவர்களுக்கும் உதவும் வகையில் தகுதி உடையவர்களுக்கு பல்வேறு நிபந்தனைகள் உடன் ஆடு, மாடுகள் இலவசமாக வழங்கப்பட்டது. அதன் படி சொந்தமாக ஆடு, மாடுகள் வைத்திருப்பவர்கள் மற்றும் அரசு பணியில் இருபவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற இயலாது என அறிவிக்கப்பட்டது
தீபாவளி போனஸாக BMW பைக், ஆப்பிள் ஐபோன் – Biz2Credit நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!
இத்திட்டத்தின் கீழ் வாங்கிய ஆடுகளை குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு விற்பனை செய்யக் கூடாது என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டம் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. குறிப்பாக பெண்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. மேலும் இத்திட்டத்தின் மூலம் கால்நடைகளிடம் இருந்து கிடைக்க கூடிய பால் பொருட்கள், இறைச்சிகள் வரத்தும் அதிகரிக்கிறது. இதன் மூலம் கிராமப்புற மக்கள் வருமானம் ஈட்டுகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இத்தகைய திட்டம் இனியும் தொடரும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் 6ம் நாளாக இன்று தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கால்நடை, வேளாண் மற்றும் மீன்வள ஆகிய துறைகளின் மீதான விவாதத்தின் போது பேசிய முதல்வர் அவர்கள், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இலவச ஆடு, மாடுகள் வழங்கும் திட்டம் தமிழகத்தில் தொடரும் என அறிவித்தார்.