தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு 2022 – டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! முழு விபரம் இதோ!
தமிழக நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தில் கிராஜுவேட் அப்ரண்டிஸ் மற்றும் டெக்னீசியன் அப்ரண்டிஸ் பணிக்கான ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய தேவையான தகுதிகளை பற்றி இந்த பதிவில் காண்போம்.
வேலைவாய்ப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தில் உள்ள கிராஜுவேட் அப்ரண்டிஸ் மற்றும் டெக்னீசியன் அப்ரண்டிஸ் உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்ரண்டிஸ் பயிற்சியின் காலம் ஒரு ஆண்டு ஆகும். அத்துடன் இப்பணிக்கு விண்ணப்பதாரர் விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் பட்டதாரி அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். அதே போல் டிப்ளமோ அப்ரண்டிஸ் பணியிடத்திற்கு பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் டிப்ளமோ படித்தவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்களுக்கு அரசு அறிவித்தபடி அதிகபட்ச வயது வரம்பில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் அவர்கள் பெற்ற சிஜிபிஏ அல்லது சதவீதத்தின் அடிப்படையில் தகுதியான நபர்களின் சுருக்கப்பட்டியல் தயார் செய்யப்படும்.
அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஜூன் மாதத்தில் 8 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு!
அதன்படி பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்களின் தற்காலிக பட்டியல் ஜூன் 15ம் தேதி அன்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான தற்காலிக பட்டியல் ஜூன் 23 முதல் 24ம் தேதி அன்றும் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பத்தார்கள் https://
அல்லது ht
மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற http://portal.mhrdnats.