தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கோரிக்கை – கண்டன ஆர்ப்பாட்டம்!
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி குறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில் அதனை கண்டித்து அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்டன ஆர்ப்பாட்டம்:
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை, பட்ஜெட் வெளியிடப்பட்டு உள்ள நிலையில் அதில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி குறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி வழங்க வேண்டும், 70 வயது முடிந்த ஓய்வூதியர்களுக்கான ஓய்வூதியம் 10 சதவிகிதம் உயர்த்தி வழங்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கைகளுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – சிறப்பு வைப்பு திட்டம் அறிமுகம்!
அரசு அறிவித்த நிதிநிலை பட்ஜெட்டில் “அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களை தமிழக அரசு ஏமாற்றுகிறது” என ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். அதனை தொடர்ந்து ‘அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் வழங்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டதை கண்டித்து நெல்லையில் அரசு ஊழியர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
TN Job “FB Group” Join Now
மத்திய அரசு வழங்கிய அகவிலைப்படி உயர்வு உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை அட்டை அணிந்து 500க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் இன்று பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஜூலை 1 முதல் மத்திய அரசு வழங்கிய அகவிலைப்படி உயர்வு உடனடியாக வழங்க வேண்டும் என நெல்லை மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினை சார்ந்த அதிகாரிகள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து போராட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.