தமிழக அரசுப் பேருந்துகளில் ஆண்களுக்கு கூடுதல் கட்டணம் வசூல் – அமைச்சர் விளக்கம்!
தமிழக அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச கட்டணம் என்ற அறிவிப்பை தொடர்ந்து, ஆண்களுக்கு மட்டும் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
கூடுதல் கட்டணம்
தமிழகத்தில் இயங்கி வரும் நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணம் செய்ய இலவசம் என்ற அறிவிப்பு கடந்த மே மாதத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்து அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கு மட்டும் சிறப்பு இலவச பயணச் சீட்டுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசுப் பேருந்துகளில் ஆண்களுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதால், கட்டணத்தை கூடுதலாக பெற்று வருவதாக அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் ஒரு குற்றசாட்டை வைத்துள்ளார்.
ஆன்லைன் மூலம் விதவை சான்றிதழ் பெற விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இதோ!
அதாவது பேருந்துகளில் பெண்கள் பயணம் செய்வதற்கு இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், இதுவரை ரூ.5க்கு கொடுக்கப்பட்டு வந்த பயணச்சீட்டுகள் இப்போது ரூ.10 ஆக உயர்த்தப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. அரசின் மீதான இந்த குற்றசாட்டை போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மறுத்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
இது தொடர்பாக விளக்கமளித்த அவர், ‘அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம் சுமத்துவதை போல அரசுப் பேருந்துகளில் ஆண்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. ஒரே ஒரு இடத்தில் மட்டும் இவ்வகையான கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்த நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த குற்றம் சாட்டுதல் பொதுவாக இருக்க கூடாது’ என கூறியுள்ளார். மேலும் கட்டணமில்லா பேருந்து சேவைகளின் மூலம் இதுவரை 6 கோடி பெண்கள் பயனடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.