தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி – அமைச்சர் உறுதி!
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் எனவும், விரைவில் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் தெரிவித்து உள்ளார்.
நகைக்கடன் தள்ளுபடி:
தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது கூட்டுறவு நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். மேலும் விவசாயிகள் பயிர் கடன்களை ரத்து செய்யப்படும், பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும், நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் போன்ற வாக்குறுதிகளை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அளித்தார். அதன்படி ஆட்சிக்கு வந்தவுடன் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், ஆவின் பால் விலை குறைப்பு போன்ற 5 வாக்குறுதிகளை திட்டமாக செயல்படுத்தினார்.
28 லட்ச அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – உத்தரவு வெளியீடு!
மேலும் திமுக அளித்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என அதிமுகவினர் குற்றம் சாட்டினார். மக்களை திமுக அரசு ஏமாற்றியது என்றும் புகார் அளித்தனர். மேலும் திமுக அரசு அதிமுகவை எதிர்த்து பொய் வழக்கு தொடர்வதாகவும், தேர்தலில் அளித்த வாக்குறுதியான நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் & டீசல் விலை குறைப்பு போன்றவற்றை நிறைவேற்றவில்லை. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று அதிமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும். மேலும் நகைக்கடன்கள் நிச்சயம் தள்ளுபடி செய்யப்படும். குடும்ப அட்டை இல்லாதோர் மனு தாக்கல் செய்தால் 15 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து கூட்டுறவு சங்க தேர்தல் விரைவில் நடத்தப்படும். விவசாயிகளுக்கு பயிர் கடன்கள் கால தாமதமின்றி வழங்கப்படும் என தெரிவித்தார்.