தமிழக அரசு வழங்கும் விருதுகள் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு! விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் கலை புலமைகளை மேம்படுத்தவும் கலைஞர்களின் கலைத்திறனை சிறப்பிக்கும் வகையிலும் விருதுகள் வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விருது:
தமிழகத்தில் கலை துறையில் உள்ளவர்களை கருத்தில் கொண்டு அரசு சார்பாக பல விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கலைஞர்கள் ஊக்கம் பெற்று மேலும் அடுத்த நிலைகளுக்கு செல்கின்றனர். ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பல கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மற்ற ஆண்டுகளை தொடர்ந்து 2021 – 2022ம் ஆண்டுக்கு கலை விருதுகள், கலை பண்பாட்டு துறையின் கீழ் இயல், இசை, நாடகம் முதலிய கலைகளில் 1 அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் தலா 5 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கபட உள்ளது.
HCL Tech நிறுவனத்தில் ரூ.3.5 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பாட்டு, பரத நாட்டியம், கும்மி, கோலாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், தோல் பாவை கூத்து, பொம்மலாட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம், கழியல் ஆட்டம், கணியான் கூத்து, ஓவியம் சிற்பம், அரசன் அரசியாட்டம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், குறவன் குறத்தி யாட்டம், ஆழியாட்டம், கை சிலம்பாட்டம்,என அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழகத்தில் 1591 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் – மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!
இந்த விருது பெற கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் . விண்ணப்பத்துடன் கலைஞரின் வயது சான்று, முகவரி சான்று மற்றும் கலை அனுபவ சான்றுகளின் நகல்களுடன் வெளியிடப்பட்ட நாளில் இருந்து 20 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விருதானது 18 வயது மற்றும் அதற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை இளமணி, 36 முதல் 50 வயதுக்குட்பட்ட கலைஞர்களுக்கு கலைச்சுடர் மணி, 51 முதல் 65 வயதுக்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை நன்மணி என்ற நிலையில் வழங்கப்பட்டுள்ளது.