தமிழக அரசு கலை & அறிவியல் கல்லூரி சேர்க்கை துவக்கம் – உயர்கல்வித்துறை அறிவிப்பு!

0
தமிழக அரசு கலை & அறிவியல் கல்லூரி சேர்க்கை துவக்கம் - உயர்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழக அரசு கலை & அறிவியல் கல்லூரி சேர்க்கை துவக்கம் - உயர்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழக அரசு கலை & அறிவியல் கல்லூரி சேர்க்கை துவக்கம் – உயர்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் கடந்த மே மாதம் நடந்து முடிந்த ப்ளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு S.S.L.C பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெளியிட்டார். இந்நிலையில் உயர்க்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

முக்கிய அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா எதிரொலியாக கடந்த 2 வருடங்களில் எந்த ஒரு கல்வி நிறுவனங்களும் சரியாக திறக்கப்படவில்லை. கொரோனா அச்சத்தால், அனைத்து வகுப்புகளும் ஆன்லைன் முறையில் நடந்தது. மேலும் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியதால், கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் தாமதமாக தொடங்கியது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை உறுதி அளித்தது. இந்த உறுதியில் பேரில், திட்டமிட்டபடி ஆண்டு இறுதித் தேர்வுகள் நிறைவடைந்தது.

Mahindra நிறுவனத்தை தொடர்ந்து அக்னி வீரர்களுக்கு RPG குழுமத்தில் வேலைவாய்ப்பு – முக்கிய அறிவிப்பு!

தமிழக பள்ளிக்கல்வியின் பாடத்திட்டத்தில் 10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மே 5 முதல் 30-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 10-ம் வகுப்பு தேர்வை 9.5 லட்சம் மாணவர்களும், பிளஸ் 2 தேர்வை 8.3 லட்சம் மாணவர்களும் எழுதினர். மேலும் விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், தேர்வு முடிவுகள் ஜூன் 20 வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் கடந்த ஜூன் 13ம் தேதி முதல் திறக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து கல்லூரி மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வும் நடைபெறுகிறது.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று 12 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.7% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் சுமார் 9% அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.76 % மாணவ , மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 22 முதல் இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் www.tngasa.in, www/tngasa.org என்ற இணையதள முகவரிகளில் விண்ணப்பிக்கலாம். வரும் 27ம் தேதிக்கு பதில், 22ம் தேதியே ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!