சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வு – இன்றைய நிலவரம்!
கடந்த வார இறுதியில் இருந்து தொடர்ச்சியாக சரிவை கண்டு வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 1) சற்றே உயர்ந்துள்ளது. அந்த வகையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 அதிகரித்து தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விலை உயர்வு
இந்தியாவில் நாளுக்கு நாள் தங்க நகை வாங்குபவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தங்க நகைகளின் மீதுள்ள ஆர்வத்தினால் கிடைக்கும் பணங்களை பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஆச்சரியமான வகையில் குறைந்து வந்து கொண்டிருக்கும் சூழலில், கடந்த வாரத்தில் நகை விற்பனையும் அமோகமாக நடைபெற்றது.
இந்தியாவில் 30 லட்சம் WhatsApp கணக்குகள் முடக்கம் – அதிகாரபூர்வ அறிவிப்பு!
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கடந்த வாரத்தில் மட்டும் சவரனுக்கு ரூ.400 வரை தங்கத்தின் விலை சரிவை கண்டது. அதே போல கடந்த மாதத்தில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த ஆபரணத் தங்கத்தின் விலையும், மாத இறுதியில் சவரனுக்கு ரூ.35 ஆயிரமாக குறைந்து விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (செப்டம்பர் 1) துவங்கியுள்ள நகை விற்பனை விலையானது சற்றே ஏற்றமடைந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில் சென்னையில் இன்று (செப்டம்பர் 1) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் கீழ் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.35,648 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,456 க்கு விற்பனையாகிறது. தவிர சென்னையில் இன்று சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலையும் நேற்றை விட 40 காசுகள் வரை உயர்ந்து ரூ.68.30 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.