சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.424 உயர்வு – அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!
சென்னையில் தங்க நகை விலை நேற்று மாலை நிலவரத்தை விட தற்போது ரூ. 424 உயர்ந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
தங்கத்தின் விலை:
ஆபரணத் தங்கத்தின் மீதான இந்தியர்களின் மோகம் காலம் செல்ல செல்ல அதிகரித்து வருகிறதே தவிர, குறைவதில்லை. இதனால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து வருகிறது. வணிக சந்தையின் காலை மற்றும் மாலை நேர நிலவரப்படி தினமும் இரண்டு முறை தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. நவம்பர் 4ம் தேதி நாட்டில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் தங்கநகை வாங்க அதிக ஆர்வமுடன் இருந்தனர்.
தடுப்பூசி செலுத்தாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது – அரசு உத்தரவு!
ஆனாலும் கடந்த வாரம் முதல் தங்க நகை விலை குறைந்து காணப்பட்டது. நேற்று மாலை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.35,576க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று இருந்ததை விட இன்று அதிக தொகை இன்று உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதால் முதலீடுகள் குறைந்து விடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நவ.6 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.424 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்க நகை ரூ.36,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,500 க்கு விற்பனையாகிறது. மேலும், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.68.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.