சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.144 குறைவு – இன்றைய நிலவரம்!
தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் மாறிக்கொண்டே வருகிறது. இதனை தொடர்ந்து இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.144 குறைந்துள்ளது. மேலும் ஒரு சவரன் 36,192க்கு விற்பனை செய்யப்படுகிறது
தங்கத்தின் விலை குறைவு
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பொதுமக்கள் பல்வேறு இழப்புகளை சந்தித்து வருகின்றன. இதனால் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை பாதுக்காப்பான முறையில் கவனம் செலுத்த தொடங்கின. அதனால் பங்கு சந்தை, அமெரிக்க டாலர், ரியல் எஸ்டேட் என இருந்த முதலீடுகள் தற்போது தங்கத்தின் மீது தங்களது கவனத்தை செலுத்த தொடங்கின. இதனால் தங்கத்தின் தேவையும் அதிகரித்தது. அத்துடன் தங்கத்தின் விலையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. தற்போது தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
சென்னையில் தொடரும் கனமழை, 2 சுரங்கப் பாதைகள் மூடல் – போக்குவரத்திற்கு தடை விதிப்பு!
இந்தியாவில் தங்கத்தின் விலை சர்வதேச கச்சா எண்ணெயின் விலை, அமெரிக்க டாலர் மதிப்பு மற்றும் பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கம் ஆகியவற்றை கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. தற்போது கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து கொண்டு வந்தது. அதே போல் இன்று ஒரே நாளில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.18 குறைந்து ரூ.4,542-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் ஒரு சவரனுக்கு ரூ.144 குறைந்து ஒரு சவரன் ரூ.36,192-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டிசம்பரில் திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – தரிசன டிக்கெட் விநியோகம் துவக்கம்!
இதே போல் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ரூ.70 பைசா குறைந்து ஒரு கிராம் ரூ.67.20 – க்கு விற்கப்படுகிறது. அதே போல் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.700 குறைந்து ரூ.67,200 – க்கும் விற்கப்படுகிறது. இவ்வாறு தங்கம் மற்றும் வெள்ளி விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து வாடிக்கையாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளன. அத்துடன் நகை பிரியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தங்க நகைகளை வாங்கி மகிழ்ச்சி அடைகின்றன. இதன் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி வியாபாரிகளும் மகிழ்ச்சியாக உள்ளனர்.