சென்னை: தாறுமாறாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகை பிரியர்களுக்கு ஷாக்!
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.38,912 விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 4,864 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.148 க்கு உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை
கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து குறைந்து கொண்டே செல்கிறது. தங்கத்தின் விலை பல மடங்கு உயர்ந்து கொண்டே இருந்தாலும் நகை பிரியர்களுக்கு தங்கத்தின் மீது உள்ள ஆசை மட்டும் குறைவதே இல்லை. பெரும்பாலும் இல்லத்தரசிகள் தங்கத்தில் முதலீடு செய்வதை தான் விரும்பி வருகின்றனர். தங்கத்தில் முதலீடு செய்வதை தான் புத்திசாலித்தனமாக எண்ணுகின்றனர். இந்த கொரோனா காலகட்டத்தில் மட்டுமே தங்கத்தின் விலை பல ஆயிரங்கள் அதிகரித்து விட்டன.
மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – அகவிலைப்படி (DA) 5% உயர்வு!
கடந்த மாதங்களுக்கு முன் உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக பங்குசந்தைகளில் சரிவர நிலவரம் சரிவடைந்திருக்கிறது. அதனால் டீசல்,பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு விலை அதிகரித்து உள்ளன. மே 2ம் தேதி மற்றும் 3ம் தேதி ஆகிய 2 நாட்களாக தங்கம் விலை கடுமையாக சரிந்தது. 2 நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு ரூ.856 குறைந்தது. அட்சய திருதியை நாளில் தங்கம் விலை குறைந்ததால் நகை பிரியர்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியது.
Exams Daily Mobile App Download
மேலும், இன்று சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 4,864 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 38,912 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து 68.30 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 68,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.