சென்னை: ஒரே நாளில் அதிரடியாய் ரூ.288 குறைந்த தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் ஆபரண தங்கத்தின் விலை சென்னையில் ரூ.288 குறைந்துள்ளது. தங்க விலை அதிரடியாய் விலை குறைந்த காரணத்தினால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை
கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை அதிகரிப்பதுமாய் குறைவதுமாய் இருந்து வருகிறது. எப்போதும் அட்சய திருதியின் போது மக்கள் அதிகமாக நகை வாங்குவதன் காரணமாக தங்கத்தின் விலை உயரும். ஆனால், இந்தாண்டு அட்சய திருதியின் போது தங்கத்தின் விலை மிகவும் சரிவடைந்தது. இதுமட்டுமல்லாமல்
உக்ரைனை உலுக்கி கொண்டிருக்கும் ரஷ்ய போராலும் தங்கத்தின் விலை பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இதனால் அந்நாட்டில் ஏற்றுமதி இறக்குமதி என அனைத்துமே பாதிப்படைந்து பங்கு சந்தை நிலவரங்களும் மிகவும் சரிவடைந்துள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு சரண்டர், ஈட்டிய விடுப்பு? வருவாய்துறை சங்கம் வலியுறுத்தல்!
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 40,000 ரூபாய் வரைக்கும் தங்கம் விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று ஒரே நாளில் மட்டுமே சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 உயர்ந்து ரூ.38,112-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 4764 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதேபோல சென்னையில் நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 65.60 ரூபாய்க்கு விற்பனையானது.
Exams Daily Mobile App Download
நேற்று ஒரேடியாக ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் தற்போது தங்கத்தின் விலை சரிவடைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்து ரூ.37,824 -க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.36 குறைந்து ரூ.4,728க்கு விற்பனையாகி வருகிறது. இதேபோல ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.50 காசுகள் குறைந்து ரூ.65.10-க்கு விற்பனையாகி வருகிறது. தங்கத்தின் விலை அதிரடியாய் குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.