சென்னை: 40 ஆயிரம் ரூபாயை கடந்த ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்!
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா பிப் 24 ஆம் தேதி முதல் கடுமையான தாக்குதலை தொடங்கியது. ரஷ்யா படையெடுப்பால் உக்ரைனில் கடும் போர் பதற்றம் காணப்படுகிறது. இந்த ரஷ்யா- உக்ரைன் போர் எதிரொலியால் இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை இன்று அதிரடி உயர்வு:
கடந்த இரண்டு வருடங்களில் கொரோனா எழுச்சியால் பணவீக்கம் நிலவி வந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் தற்போது சேமிப்பில் அதிக முக்கியத்துவம் காட்டி வருகின்றன. இந்த வகையில் வங்கிகள் மற்றும் போஸ்ட் ஆபீஸ் சிறுசேமிப்பு திட்டங்கள் , தங்கம் ஆகியவைகளில் பணங்களை முதலீடு செய்து வருகின்றனர். இந்தியாவில் தென் மாவட்டங்களில் உள்ள பெண்கள் அதிகம் நகை விரும்பிகளாக இருப்பார்கள் . இதனால் தங்கத்தின் தேவை மிகவும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நடப்பு ஆண்டு தங்கம் விலை கடந்த 4 மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் இம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி முதல் மின்னல் வேகத்தில் தங்கம் விலை உயர்வை சந்தித்தது. மேலும் கடந்த 1ம் தேதி ஒரு சவரன் ரூ.38,384க்கும், 2ம் தேதி சவரன் ரூ.39,024க்கும், 3ம் தேதி சவரன் ரூ.38,912க்கும் விற்கப்பட்டது. 4ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.4,873க்கும், சவரன் ரூ.38,984க்கும் விற்கப்பட்டது. 5ம் தேதி ஒரு சவரன் ரூ.39,760க்கும் விற்கப்பட்டது. தங்க விலை எவ்வளவு உயர்ந்தாலும் நகை விரும்பிகள் தங்க நகைகளை வாங்கி கொண்டு தான் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று காலை தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடி உயர்வாக,கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,055க்கும், சவரனுக்கு ரூ.680 அதிகரித்து ஒரு சவரன் ரூ.40,440க்கும் விற்கப்பட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) உயர்வு – ஹோலி அன்று பிரதமர் அறிவிப்பு?
அதே நேரத்தில் ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்தை தாண்டி உள்ளது. சென்னையில் வெள்ளியின் விலை இன்று ஒரு கிராம் ரூ.1.80 உயர்ந்து ரூ. 75.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரஷ்யா, உக்ரைன் இடையே தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இதன் தாக்கம் உலக சந்தையில் எதிரொலித்து தங்கம் விலை உயர்ந்துள்ளது. போர் தொடரும் பட்சத்தில் தினம், தினம் தங்கம் புதிய உச்சத்தை தொடும். போர் பதற்றம் குறைந்தால் மட்டுமே தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிரடி விலை ஏற்றம் நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.