சென்னையில் இன்று அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
தமிழகத்தில் தான் மற்ற மாநிலங்களை விட அதிகமான நகைப்பிரியர்கள் உள்ளனர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றை விட இன்று குறைந்து விற்பனையாகிறது. இதனால் நகைப்பிரியர்கள் அதிக மகிழ்ச்சியில் உள்ளனர்.
தங்கத்தின் விலை குறைவு:
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து முதலீட்டு உலகம் அரண்டு போய் உள்ளது. ஆனாலும், கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி அடைந்துள்ளது. அதாவது இந்த போர் மீதான பொருளாதார தடை போன்ற காரணங்களால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. பங்குச்சந்தை சரிவு, பணவீக்கம், பொருளாதார அதிர்வுகளுக்கு இடையே தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாக முதலீட்டாளர்கள் கருதுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.
தமிழகத்தில் நாளை (ஜூன் 7) மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
ஆண்டாண்டு காலமாக மக்கள் தங்கத்தில் முதலீடு செய்து வந்ததற்கான காரணம், சிக்கலின் போது நமக்கு பெரும் உதவியாக இருப்பது தங்க நகைகள் தான். தமிழகத்தில் அட்சயதிரிதியை கடந்த மே 3ம் தேதி கொண்டாடப்பட்டது. அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை பொதுமக்களிடம் உள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அட்சய திருதியை நாளில் கடைகளில் நேரடி விற்பனை நடக்கவில்லை.
Exams Daily Mobile App Download
ஆன்லைன் மூலம் குறைந்த அளவு மட்டுமே நகைகள் விற்பனை செய்யப்பட்டன. இந்த ஆண்டு கொரோனா தொற்று குறைந்தால் பொதுமக்கள் பெருமளவில் கடைகளுக்கு வந்து நகைகள் வாங்கினர். இந்நிலையில் சில தினங்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அந்த வகையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.4,774 க்கு விற்பனையாகிறது. மேலும் 1 சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.38,192 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் நேற்றை விட தங்கத்தின் விலை சவரனுக்கு 8 ரூபாய் குறைந்துள்ளது. இதையடுத்து 24 கேரட் தங்கம் இன்று 1 கிராம் ரூ.5,209 க்கும், 1 சவரன் ரூ.41,672 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.