சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 குறைந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விலை குறைந்துள்ளதை அடுத்து நகைகள் வாங்கவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தங்கம் விலை:
இந்தியாவில் பெரும்பாலும் மக்கள் தங்க அணிகலன்களை அணிய ஆர்வம் காட்டுவர். அதனாலேயே அதிக அளவு இந்தியாவில் விற்பனை இருக்கும். மற்ற நாடுகளுக்கு தங்கம் என்பது ஒரு வகையான சேமிப்பு மட்டுமே ஆனால் நம் நாட்டில் தான் தங்கத்தால் ஆன அணிகலன்கள் அணிவது ஒரு வகையான கலாசாரமாக உள்ளது. வீட்டு விசேஷங்கள் முதல் திருவிழா மற்றும் பண்டிகைகள் என அனைத்திற்கும் தங்க நகைகள் வாங்குவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த தங்கத்தின் விலை சந்தை நிலவரத்தை பொருத்தும் சுப முகூர்த்த நாட்களை பொருத்தும் விலை ஏற்றம் அடைகிறது.
இந்த நிலையில் ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் நிலவியது. இதனால் திருமணத்திற்கு நகைகள் வாங்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தவர்கள் தங்கத்தில் சேமிப்பு செய்ய நினைத்தவர்கள் சவாலை சந்தித்தனர். பண்டிகை மற்றும் சுபமுகூர்த்த தினங்களில் தான் தங்கத்தின் விலை அதிகரிக்கும் தற்போது சாதாரண நாட்களில் தங்கம் விலை அதிகரித்துள்ளது. தங்கத்தின் விலை பங்கு சந்தை நிலவரத்தை பொறுத்து நாள் ஒன்றுக்கு 2 காலையிலும், மாலையிலும் விலை மாறுபடுகிறது.அதன்படி இன்றைய காலை நேர நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்துள்ளது.
Exams Daily Mobile App Download
அதன்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 38,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் 4775 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 24 கேரட் தூய தங்கம் ஒரு கிராம் 41392 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி 67.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 67500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.