சென்னை: சவரனுக்கு ரூ.328 குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆபரண தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் மாறிக்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.
தங்கத்தின் விலை குறைவு
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பொது மக்களிடையே பல்வேறு பொருளாதார இழப்புகள் ஏற்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் தங்கள் முதலீடுகளை பாதுகாப்பான முதலீட்டில் செலுத்தத் தொடங்கினர். இதில் குறிப்பாக தங்கத்தின் மீது அதிக முதலீடுகளை செலுத்தி வந்தனர். ஏனெனில் தங்க நகைகளை பயன்படுத்தி வங்கிகளில் குறைந்த வட்டிக்கு கடன் தொகையை பெறலாம். அத்துடன் வெளிநாட்டினர்களும் தங்கத்தின் மீது அதிக முதலீடுகளை செலுத்தி வந்தனர்.
தமிழக மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு 2022 – அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு!
அதனால் தங்கத்தின் தேவையும் விலையும் அதிகரிக்க தொடங்கியது. அத்துடன் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் மாறிக்கொண்டே வருகிறது. மேலும் அண்மையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்தது. இந்த நிலையில் இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.41 குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,537க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு சவரன் ரூ.36,296க்கு விற்பனை செய்யப்படுகிறது.
TN TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு பிப்.12 முதல் தேர்வு – அட்டவணை வெளியீடு!
.
அதனால் தங்கத்தின் விலை சரிந்து வருவதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள். இன்று ஒரு கிராமுக்கு 1.40 பைசா குறைந்து ஒரு கிராம் ரூ.66க்கு விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.66000 என விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம் மற்றும் வெள்ளி நகை கடைகளில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.