சென்னை: ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
ஆபரண தங்கத்தின் விலை உக்ரைன் மற்றும் ரஷ்ய போரால் தாறுமாறாக உயர்ந்து கொண்டிருக்கிறது. இன்று மட்டுமே சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 600 ரூபாய் உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
தங்கத்தின் விலை:
தங்கம் விலை நாளுக்கு நாள் பல மடங்காக அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இருப்பினும் குடும்ப தலைவிகள் மற்றும் நகை பிரியர்கள் ஆபரண தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த கொரோனா கால கட்டத்தில் மட்டுமே தங்கத்தின் விலை கிட்டத்தட்ட பவனுக்கு பல ஆயிரங்கள் அதிகரித்து விட்டது. அவ்வப்போது இந்த தங்கத்தின் விலை திடீரென விலை உயர்ந்தும், திடீரென விலை குறைந்தும் காணப்படுகிறது.
தமிழகத்தில் மீண்டும் அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கு? உண்மை நிலவரம் இதோ!
தற்போது உக்ரைனை உலுக்கி கொண்டிருக்கும் ரஷ்ய போரால் தங்கத்தின் விலை அதிரடியாய் உயர்ந்து கொண்டிருக்கிறது. கடுமையாக நிலவி கொண்டிருக்கும் போரால் அந்நாட்டில் ஏற்றுமதி இறக்குமதி என அனைத்துமே பாதிப்படைந்துள்ளது. இதனால் பங்கு சந்தை நிலவரங்களும் சரிந்துள்ளது. நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 37, 896 ரூபாய்க்கு விற்பனையாகி கொண்டிருந்தது. அதேபோல சென்னையில் நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 69 ரூபாய்க்கு விற்பனையானது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 14% அகவிலைப்படி (DA) உயர்வு – முழு விவரம் இதோ!
தற்போது மறுபடியும் ஆபரண தங்கத்தின் விலை ஒரேடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.38,504-க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.4,813-க்கு விற்பனையாகி வருகிறது. இதேபோல ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.10 உயர்ந்து ரூ.70.10-க்கு விற்பனையாகி வருகிறது. கிடுகிடுவென தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே செல்வதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.